டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

இரட்டை குடியுரிமை என்றால் என்ன, அது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது?

ஆதாரம்: etimg

இரட்டைக் குடியுரிமை பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த வசதி இரண்டு நாடுகளின் குடிமகனாக இருப்பதற்கும், ஒவ்வொரு நாட்டின் குடியுரிமை உரிமைகளை ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

இருப்பினும், எல்லா நாடும் இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. நாட்டுக்கு ஏற்ப விதிகள் மாறுபடலாம்.

ஆனால், இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை நிலை என்ன?

இந்தியாவில் இரட்டை குடியுரிமை தொடர்பான விதிகள் மற்றும் அதன் மாறுபாடுகளை அறிய தொடர்ந்து இந்த கட்டுரையைப் படிக்கவும்.

இரட்டை குடியுரிமை என்றால் என்ன?

இரட்டைக் குடியுரிமை என்பது ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகளைக் கொண்டிருக்கலாம். இது அந்த நபருக்கு நாடு சார்ந்த உரிமைகளையும் நன்மைகளையும் வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் இரட்டை அல்லது பல குடியுரிமைகள் கொண்டிருந்தால் அந்தந்த நாடுகளில் வேலை செய்யலாம், படிக்கலாம் மற்றும் வசிக்கலாம்.

மேலும், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு போன்றவற்றில் தரமான சலுகைகளைப் பெறலாம்.

இரட்டை குடியுரிமை கொண்ட தனிநபர்கள் பல பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்க முடியும், இது அவர்களை எளிதாக பயணிக்க அனுமதிக்கிறது. மேலும், அவர்கள் பெரும்பாலான நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்தியர்கள் இரட்டை குடியுரிமை பெற முடியுமா என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் கேள்விக்கு கீழே நாங்கள் பதிலளித்துள்ளோம்.

இரட்டை குடியுரிமையை இந்தியா அனுமதிக்கிறதா?

இந்திய அரசியலமைப்பில் இரட்டை அல்லது பல குடியுரிமைகள் குறித்த எந்த ஏற்பாடும் இல்லை. அதற்கு பதிலாக, ஒரு இந்தியர் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் இரண்டாவது பாஸ்போர்ட்டைப் பெறலாம். ஆனால், அவர்கள் இந்திய குடியுரிமையை இழக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பர்.

பாஸ்போர்ட் சட்டம் 1967 ஒவ்வொரு இந்திய குடிமகனும் மற்றொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்ற பிறகு தங்கள் பாஸ்போர்ட்டுகளை அருகிலுள்ள தூதரகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பிறகு ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா (ஓ.சி.ஐ-OCI) அந்தஸ்தைப் பெற வேண்டும்.

இரட்டை குடியுரிமைக்கான சில தேவைகள் பின்வருமாறு -

  • பிரிவுகள் 5, 6 மற்றும் 8 இன் படி, தாமாக முன்வந்து வெளிநாட்டு நாட்டின் குடியுரிமை கோரும் நபர்கள் இந்திய குடிமக்களாக இருக்க முடியாது.

  • அவர்கள் குடியுரிமை கோரிக்கையை எழுப்பிய வெளிநாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொள்வார்கள்.

  • தனிநபர்கள் தங்கள் இந்திய பாஸ்போர்ட் மற்றும் இந்திய குடியுரிமையை உறுதிப்படுத்தும் பிற ஆவணங்களை அருகிலுள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இந்தியாவில் இரட்டை குடியுரிமைக்கு எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றாலும், தனிநபர்கள் ஓ.சி.ஐ கார்டை தேர்வு செய்யலாம். இது பல நன்மைகளை வழங்கும். அவற்றில் சில கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.

இரட்டை குடியுரிமையின் நன்மைகள் யாவை?

இரட்டைக் குடியுரிமை அல்லது ஓ.சி.ஐ உள்ள நபர்கள் பின்வரும் பலன்களை அனுபவிக்க முடியும்-

  • இந்தியாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டிலும் காலவரையின்றி வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், வியாபாரம் செய்வதற்குமான சுதந்திரம்

  • மல்டிபிள் என்ட்ரி லைஃப்-லாங் விசாக்கள்

  • அவர்கள் உடைமைகள் மற்றும் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்க முடியும்

  • இந்தியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைப் பார்வையிட உள்நாட்டு இந்திய பார்வையாளர்களுக்கு விதிக்கப்படும் அதே நுழைவுக் கட்டணம் பதிவு செய்யப்பட்ட ஓ.சி.ஐ(OCI)யிடம் வசூலிக்கப்படும்.

  • அகில இந்திய ப்ரீ-மெடிக்கல் டெஸ்ட் அல்லது பிற சோதனைகளில் கலந்து கொள்வதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் (என்.ஆர்.ஐ-NRI) சமநிலை. எனவே, சம்பந்தப்பட்ட சட்டங்களில் உள்ள விதிகளின்படி அவர்கள் சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்.

  • தனிநபர்கள் பல பாஸ்போர்ட்களை வைத்திருக்கலாம்.

  • பிற நாட்டின் பாஸ்போர்ட் சொந்த நாட்டை விட மதிப்புள்ளதாக இருந்தால் "விசா ஆன் அரைவல்" பெறுவதற்கான வாய்ப்புகள்.

  • இரண்டாவது பாஸ்போர்ட் மூலம், மற்ற நாட்டில் ஏதேனும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டால், அவர்கள் குடியுரிமை பெற்ற மற்ற நாட்டிற்கு இடம்பெயரலாம்.

தனிநபர்கள் தங்கள் வெளிநாட்டு குடியுரிமையை ஒப்படைத்த பிறகு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், இந்த காரணி புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பொறுத்தது.

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இப்போது பார்க்கலாம்.

இரட்டை குடியுரிமை பெற யார் தகுதியானவர்?

தனிநபர்கள் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் சில அளவுருக்களை சரிபார்க்க வேண்டும். தகுதி அளவுருக்கள் நாட்டிற்கு ஏற்ப மாறுபடும்.

இந்திய குடியுரிமையைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட அளவுருக்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் இந்தியாவில் சாதாரணமாக வசிக்கும் ஒரு நபர் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • இந்தியக் குடிமகனைத் திருமணம் செய்த நபர்களும் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • இந்தியக் குடியுரிமை பெற்ற பெற்றோரின் வயது வந்த மகன் அல்லது மகள் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர். இருப்பினும், அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.

  • மைனர் குழந்தையின் பெற்றோர் இருவரும் அல்லது ஒருவர் இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் குழந்தை குடிமகனாக ஆகலாம்.

  • ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் வெளிநாட்டு குடிமகனாக பதிவு செய்யப்பட்ட நபர்.

  • 26.01.1950 அன்று இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடைய வெளிநாட்டினர் அல்லது 26.01.1950 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியக் குடிமக்களாக இருந்தவர்கள் அல்லது 15.08.1947க்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

இரட்டைக் குடியுரிமைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்ப செயல்முறையும் நாட்டிற்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமையைப் பெற விண்ணப்பப் படிவம் உள்ளது.

அமெரிக்க (U.S.) குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் உங்கள் நாட்டின் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். முதலில் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நாடுகள் எவை என்பதைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது விண்ணப்பத்தில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டால், நீங்கள் அறியாமலே வசிக்கும் நாட்டின் குடியுரிமையை இழக்க நேரிடலாம்.

இருப்பினும், நீங்கள் ஓ.சி.ஐ(OCI) கார்டைத் தேர்வுசெய்தால், நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று யோசிக்கும் நபர்கள், அதற்குப் பதிலாக ஓ.சி.ஐ கார்டுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது-

  • ஆன்லைன் ஓ.சி.ஐ சேவைகளின் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யுங்கள்.
  • விண்ணப்பம் செய்வதற்கு முன் தகுதி மற்றும் ஆவணத் தேவைகளைச் சரிபார்க்கவும்.
  • படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஐ.டி.ஏ.ஆர் எண்ணுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு பிரிண்ட் அவுட்களை எடுக்கவும். உதாரணமாக, இந்த எண் - ITAR00000511 போல இருக்கும்.

இந்தியாவில் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

ஓ.சி.ஐ கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தனிநபர்கள் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் -

  • தற்போதைய குடியுரிமைக்கான சான்று
  • அசல் பாஸ்போர்ட்டுடன் ரத்து செய்யப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டின் நகல். இந்த பாஸ்போர்ட்டில் டிரில் ஸ்டாம்ப் இருக்க வேண்டும்.
  • ஓ.சி.ஐ வழங்குவதற்கான அடிப்படையாக அவர்களின் இந்திய வம்சாவளி உரிமை கோரப்பட்டால், பெற்றோர்/தாத்தா பாட்டி போன்ற உறவின் சான்று
  • இருப்பிட சான்று 
  • விண்ணப்பதாரரின் தற்போதைய மற்றும் முந்தைய பணி விவரங்கள்
  • பி.ஐ.ஓ அட்டைதாரர்கள் தங்கள் கார்டுகளின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்
  • சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் வெள்ளை நிறத்தைத் தவிர வெளிர் வண்ண பின்னணியைக் கொண்டிருக்க வேண்டும்.

இரட்டைக் குடியுரிமைக் கொள்கையை எந்த நாடுகள் அனுமதிக்கின்றன?

இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் சில நாடுகள் –

நாட்டின் பெயர் நாட்டின் பெயர் நாட்டின் பெயர்
அல்பேனியா தி காம்பியா பராகுவே
அல்ஜீரியா ஜெர்மனி பெரு
அமெரிக்கன் சமோவா கானா பிலிப்பைன்ஸ்
அங்கோலா கிரீஸ் போலந்து
ஆன்டிகுவா & பார்புடா கிரெனடா போர்ச்சுகல்
அர்ஜென்டினா குவாத்தமாலா ருமேனியா
ஆஸ்திரேலியா கினியா-பிசாவ் ரஷ்யா
ஆர்மீனியா ஹைட்டி செயின்ட் கிட்ஸ் & நெவிஸ்
பார்படாஸ் ஹோண்டுராஸ் செயின்ட் லூசியா
பிரேசில் ஹாங்காங் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
பெல்ஜியம் ஹங்கேரி சமோவா
பெலிஸ் ஐஸ்லாந்து ஸ்காட்லாந்து
பெனின் ஈராக் செர்பியா
பொலிவியா அயர்லாந்து சீஷெல்ஸ்
போஸ்னியா & ஹெர்சகோவினா இஸ்ரேல் சியரா லியோன்
பல்கேரியா இத்தாலி ஸ்லோவேனியா
புர்கினா பாசோ ஜமைக்கா சோமாலியா
புருண்டி ஜோர்டான் தென் ஆப்பிரிக்கா
கம்போடியா கென்யா சூடான்
செக் குடியரசு தென் கொரியா தெற்கு சூடான்
கனடா கொசோவோ ஸ்பெயின்
கேப் வெர்டே கிர்கிஸ்தான் இலங்கை
மத்திய ஆப்பிரிக்க குடியரசு லாட்வியா ஸ்வீடன்
சிலி லெபனான் சுவிட்சர்லாந்து
கொலம்பியா லிதுவேனியா சிரியா
கொமொரோஸ் லக்சம்பர்க் தைவான்
காங்கோ குடியரசு மக்காவ் தஜிகிஸ்தான்
கோஸ்ட்டா ரிக்கா மாசிடோனியா தாய்லாந்து
ஐவரி கோஸ்ட் மாலி திபெத்
குரோஷியா மால்டா டிரினிடாட் & டொபாகோ
சைப்ரஸ் மொரீஷியஸ் துனிசியா
டென்மார்க் மெக்சிகோ துருக்கி
ஜிபூட்டி மால்டோவா உகாண்டா
டொமினிகா மொராக்கோ யுனைடெட் கிங்டம்
டொமினிக்கன் குடியரசு நமீபியா அமெரிக்கா
கிழக்கு திமோர் நவ்ரு உருகுவே
ஈக்வடார் நியூசிலாந்து வாடிகன் நகரம்
எகிப்து நிகரகுவா வெனிசுலா
எல் சல்வடோர் நைஜர் வியட்நாம்
எக்குவடோரியல் கினி நைஜீரியா பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
பிஜி பாகிஸ்தான் ஏமன்
பின்லாந்து பனாமா ஜாம்பியா
பிரான்ஸ் பப்புவா நியூ கினி ஜிம்பாப்வே

இரட்டை குடியுரிமை தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இரட்டைக் குடியுரிமையின் தீமை என்ன?

இரட்டைக் குடியுரிமையைப் பெற நீங்கள் இரட்டை வரி செலுத்த வேண்டும் அத்துடன் நீண்ட மற்றும் விலையுயர்ந்த செயல்முறையை பின்பற்ற வேண்டும்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர்கள் இரு நாடுகளிலும் வரி செலுத்த வேண்டுமா?

ஆம், இரட்டைக் குடியுரிமை கொண்ட தனிநபர்கள் தாங்கள் வருமானம் ஈட்டும் நாட்டிற்கு வரி செலுத்த வேண்டும். இருப்பினும், சில நாடுகள் இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர்களுக்கு உதவ குடிமகனின் வரிப் பொறுப்பை நீக்குகின்றன.

வம்சாவளி அடிப்படையில் இரட்டை குடியுரிமையை அனுமதிக்கும் நாடுகள் எவை?

பல்கேரியா, குரோஷியா, கம்போடியா, ஹாங்காங், நெதர்லாந்து மற்றும் தென் கொரியா, வம்சாவளியின் அடிப்படையில் இரட்டை குடியுரிமையை அனுமதிக்கும் சில நாடுகள். எனவே, இந்த நாடுகளில் உங்கள் முன்னோர்களின் குடியுரிமைக்கான சரியான ஆதாரம் உங்களிடம் இருந்தால், நீங்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவீர்கள்.