டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

சிபில் (CIBIL) கடனை செலுத்தத் தவறியவர்கள் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்குவது எப்படி?

உங்கள் ரீபேமெண்ட் காலக்கெடு அல்லது நிலுவைத் தேதிகளைத் தவறவிடும்போது உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். இதன் விளைவாக, நீங்கள் ட்ரான்ஸ்யூனியன் சிபிலுக்கு கடனை செலுத்தத் தவறியவராக மாறுகிறீர்கள்.

அத்தகைய சூழ்நிலையில், சிபில் கடனை செலுத்தத் தவறியவர்கள் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்க, நீங்கள் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

சிபில் கடனை செலுத்தத் தவறியவர்கள் பட்டியல் என்றால் என்ன?

முதலாவதாக, சிபில் கடனை செலுத்தத் தவறியவர்கள் பட்டியல் என்று ஒன்று இல்லை என்பதை தனிநபர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிபில் அல்லது வேறு எந்த கடன் மதிப்பீட்டு நிறுவனமும் இத்தகைய பட்டியலை வெளியிடுவதில்லை. அதற்குப் பதிலாக, நீங்கள் கடனை கேட்கும் போதெல்லாம், கிரெடிட் ரிப்போர்ட் தரும் அமைப்பு ட்ரான்ஸ்யூனியன் சிபிலில் இருந்து உங்கள் சிபில் அறிக்கையைக் கேட்கிறது.

நீங்கள் சரியான நேரத்திற்குள் உங்கள் கடனை ரீபேமெண்ட் செய்யத் தவறினால், சிபில் உங்களை ஒரு கடனாளியாக அடையாளம் காண்கிறது. இந்த நிலையில் தான் நீங்கள் சிபில் கடனை செலுத்தத் தவறியவர்கள் பட்டியலிலிருந்து உங்கள் பெயரை நீக்க முனைவீர்கள்.

உங்கள் சிபில் அறிக்கையில் இருந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட கணக்கை நீக்குவது எப்படி?

உங்கள் கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தத் தவறினால், கடன் வழங்குநர் நீதிமன்றத்தில் புகார் செய்து ஒரு வழக்கைத் தாக்கல் செய்கிறார். இப்போது, உங்கள் பெயரை சிபில் கடனை செலுத்தத் தவறியவர்கள் பட்டியலில் இருந்து நீக்குவது எப்படி என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா?

இது சம்பந்தமாக, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணலாம் என நீங்கள் உங்கள் கடன் வழங்குநரை தொடர்பு கொள்ளலாம். உங்கள் நிலுவைத் தொகையை மொத்தமாக செலுத்தி, புகாரைத் திரும்பப் பெறுமாறு உங்கள் கடன் வழங்குநரிடம் நீங்கள் கேட்கலாம். உங்கள் கடன் வழங்குநர் வழக்கைத் திரும்பப் பெற நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். சிபிலுக்கு அதன் பதிவைப் புதுப்பிக்க அவர்கள் இதை தெரிவிக்க வேண்டும்.

இது இவ்வளவு எளிதாக தோன்றினாலும், அது சில விளைவுகளையும் கொண்டுள்ளது. உங்கள் கடன் வழங்குநர் நிலுவைத் தொகையில் ஏதேனும் சலுகையை வழங்கினால், உங்கள் சிபில் அறிக்கையானது 'செட்டில் செய்யப்பட்ட கணக்கு' என்றே காண்பிக்கும், மற்றும் இது வரவிருக்கும் 7 ஆண்டுகளுக்கு பிரதிபலிக்கும்.

சிபில் கடனை செலுத்தத் தவறியவர்கள் பட்டியலில் இடம்பெறாமல் இருக்க என்னென்ன வழிகள் உள்ளன?

சிபில் கடனை செலுத்தத் தவறியவர்கள் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை எப்படி நீக்குவது என்பது இப்போது உங்களுக்குத் தெரியும், அதில் இடம்பெறாமல் இருப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோம்.

  • உங்கள் கிரெடிட் அறிக்கையைக் கண்காணியுங்கள்: உங்கள் கிரெடிட் அறிக்கைகளை அடிக்கடிச் சரிபார்ப்பது, ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்துவது போன்றவை உங்கள் ஸ்கோரை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கான காரணத்தை நீங்கள் ஆராய்ந்து காலம் தாழ்த்தாமல் அதை விரைவாக சரி செய்யலாம். ஏதேனும் பிழைகளை சரிசெய்ய சிபிலையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

  • உங்கள் நிலுவைத் தொகைகளை செலுத்தி முடிக்கவும்: குறைந்த கிரெடிட் ஸ்கோருக்கான முதன்மைக் காரணம், தாமதமான கிரெடிட் ரீபேமெண்ட் ஆகும். உங்கள் கிரெடிட் அறிக்கை 'செட்டில்' அல்லது 'ரைட் ஆஃப்' நிலையைக் காட்டினால், சாத்தியமான கடன் வழங்குநர்கள் கடன் வழங்குவதைத் தவிர்ப்பார்கள். எனவே, சிபில் ஸ்கோரை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி உங்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதாகும். நிலுவைத் தொகையைச் செலுத்திய 3 மாதங்களுக்குப் பிறகு உங்கள் ஸ்கோரில் கணிசமான மாற்றத்தைக் காண்பீர்கள்.

  • சரியான நேரத்தில் பில்களை செலுத்துங்கள்: உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்தினால், சிபில் கடன் செலுத்த தவறியவர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்குவது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் கிரெடிட் கார்டு தவணைகளை அல்லது கடன் இ.எம்.ஐ-களை உங்கள் நிலுவைத் தேதிகளுக்கு முன்பே செலுத்தத் தொடங்கினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் மேம்படும்.

  • உங்கள் கிரெடிட் வரம்புகளைக் கருத்தில் கொண்டு செலவு செய்யுங்கள்: கடன் வரம்பில் 30%க்கு மேல் செலவழிக்காமல் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்கப் படியாகும். இது நல்ல கிரெடிட் ஸ்கோரை சிரமமின்றி வைத்திருக்க உதவும். அதேசமயம், உங்கள் கடன் வரம்பில் 50%க்கு மேல் செலவு செய்வது நிதி இயலாமையை பிரதிபலிக்கிறது. எனவே, உங்கள் கிரெடிட் கார்டு மூலம் அதிக பணம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

  • ஒரு நேரத்தில் ஒரு கடனைத் வாங்குங்கள்: ஒரே நேரத்தில் பல கடன்களுக்கு விண்ணப்பிப்பது உங்களுக்கு பெரும் சுமையைச் சேர்க்கும். அதோடு, உங்கள் கொடுப்பனவுகளை சிக்கலாக்குவீர்கள், இது ரீபேமெண்ட் தோல்விக்கு வழிவகுக்கும். மறுபுறம், ஒரு நேரத்தில் ஒரு கடனுக்கு விண்ணப்பிப்பது ரீபேமெண்ட்டை எளிதாகவும், அணுகக்கூடியதாகவும் ஆக்கும்.

சிபில் கடன் செலுத்த தவறியவர் நிலை கடன் ஒப்புதலை எவ்வாறு பாதிக்கிறது?

குறைந்த சிபில் ஸ்கோர் உங்கள் கடன் ஒப்புதலை மிகவும் பாதிக்கிறது. ஆனால், நீங்கள் சிபிலால் கடனை செலுத்த தவறியவராகக் கருதப்பட்டால், கடன் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

சிபில் கடனை செலுத்த தவறியவராக இருந்தால ஏற்படும் பாதிப்புகள் பின்வருமாறு:

  • உங்கள் சிபில் அறிக்கையானது நீங்கள் கடனை செலுத்தத் தவறியவராக உங்களைக் காட்டினால், கடன் வழங்குநர்கள் உங்கள் கடன் தகுதி மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனை சந்தேகிப்பார்கள்.

  • ஒரு மோசமான சிபில் அறிக்கை நீங்கள் தொடர்ந்து கடன் வாங்குகிறீர்கள் என்றும், உங்கள் செலவுகளில் ஒழுக்கமின்மை தொடர்கிறது என்றும் பிரதிபலிக்கிறது.

  • சிபில் கடனை செலுத்தத் தவறியவர் பட்டியலில் இருப்பது உங்களை பொறுப்பற்ற கடன் வாங்குபவராக காட்டும். எனவே, கடன் வழங்குநர்கள் உங்கள் கடன் விண்ணப்பத்தை நிராகரிப்பார்கள்.

     

கடனுக்காக விண்ணப்பிப்பதற்கு முன் நீங்கள் உங்கள் எல்லா ரீபேமெண்ட்டையும் திட்டமிட்டிருக்கலாம். இருப்பினும், எல்லாம் எப்போதும் நீங்கள் திட்டமிட்டபடி நடக்காது. இதன் விளைவாக, நீங்கள் ரீபேமெண்ட் செய்யத் தவறலாம்.

இருப்பினும், நீங்கள் கூடுதல் கடன் அல்லது கிரெடிட் கார்டை பெற விரும்பினால், உங்கள் பெயரை சிபில் கடனைத் திருப்பிச் செலுத்துபவர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது சிபில் அறிக்கையை நானே சரி செய்ய முடியுமா?

நீங்கள் ஆன்லைனில் டிஸ்ப்யூட் தீர்வை மட்டுமே கோர முடியும், உங்கள் கிரெடிட் அறிக்கையை மாற்ற முடியாது. உங்கள் கிரெடிட் அறிக்கையை புதுப்பிக்க கடன் வழங்குநர் சிபிலுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

சிபிலில் "செட்டில்ட்" நிலையை நீக்குவது எப்படி?

நீங்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்தியவுடன் உங்கள் கடன் வழங்குனரிடம் என்.ஒ.சி கேட்கலாம். கடன் வழங்குநருக்கு நீங்கள் இனி எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று என். ஒ.சி தெரிவிக்கும். கிரெடிட் அறிக்கையில் உங்கள் நிலையைப் புதுப்பிக்க, உங்கள் கடன் வழங்குநர் அதே என்.ஒ.சி-ஐ சிபிலுக்கு அளிக்க வேண்டும்.

சிபில் கடன் செலுத்தத் தவறியவர் வீட்டுக் கடன் பெற முடியுமா?

ஆம், சிபிலில் கடன் திருப்பிச் செலுத்தத் தவறியவர் வீட்டுக் கடனைப் பெறலாம், ஆனால் கடன் வழங்குநர் கடனுக்கு அதிக வட்டி விகிதங்களை விதிக்கலாம்.