ஹெல்த் இன்சூரன்ஸிற்கு ஆன்லைனில் வாங்கவும்

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்.

இந்தியாவில் வசிக்கும் தங்கள் பெற்றோருக்கு என்.ஆர்.ஐ-கள் (NRI) ஹெல்த் இன்சூரன்ஸை வாங்க முடியுமா?

ஆன்சைட் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் குடும்பங்களை விட்டு மைல்களுக்கு அப்பால் சென்று தங்கள் தொழிலைத் தொடர்கின்றனர். இது எந்த ஒரு நிபந்தனையுமில்லாத ஒரு இலாபகரமான விருப்பமாகத் தோன்றினாலும், ஒருவர் வெளியேறும் முடிவை எடுப்பதற்கு முன் சரிபார்ப்புப் பட்டியலில் பல விஷயங்கள் உள்ளன; அதில் பெற்றோர்கள் முதன்மையான கவலைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். சமீபத்திய கோவிட் 19 தொற்றுநோய் என்.ஆர்.ஐ-களின் பெற்றோரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இந்த கவலைகளை மேலும் அதிகரித்தது. 

குடும்ப ஆரோக்கியத்தை நோக்கி எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவது மற்றும் இது என்.ஆர்.ஐ-களுக்கும் பொருந்தும். இது சம்பந்தமாக, அடிக்கடி எழும் பொதுவான கேள்வி என்னவென்றால், "என்.ஆர்.ஐ-கள் இந்தியாவில் வசிக்கும் தங்கள் பெற்றோருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்கலாமா?" இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், ஐஆர்டிஏஐ படி, ஆம், என்.ஆர்.ஐ-கள் கண்டிப்பாக இந்தியாவில் வசிக்கும் தங்கள் பெற்றோருக்கு ஹெல்த் இன்சூரன்ஸை வாங்கலாம்.

இந்தியாவில் பெற்றோர்களுக்கான சுகாதாரக் பாலிசியை வாங்குவதன் பலன்கள்

  • அதிக மருத்துவச் செலவுகள்: கடந்த சில தசாப்தங்களில் அதிகரித்த ஆயுட்காலத்திற்கு ஒரு மறுபக்கமும் உள்ளது. மருத்துவச் செலவுகள் உயர்ந்துவிட்டன, குறிப்பாக வயதான காலத்தில் விலையுயர்ந்த மருத்துவ உதவி தேவைப்படும் பன்மடங்கு சம்பவங்கள் இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளுக்கு, உங்கள் சேமிப்பிற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் உதவுகிறது.

  • மகிழ்ச்சியான நாட்களுக்கு ஓய்வூதியத்தை சேமிக்கவும்: உங்கள் பெற்றோர் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட செலவினங்களுக்காக ஓய்வூதியத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள். மருத்துவ அவசரநிலைகளுக்கு, சேமிப்பின் பெரும்பகுதியை உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, எனவே எப்போதும் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸை வைத்திருப்பது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும். 

  • எதிர்பாராத காலங்களில் உங்கள் பெற்றோரை சுயசார்புடையவர்களாக ஆக்குங்கள்: இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு ஓய்வூதியம் கூட கிடைக்கவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் சம்பாதிக்கும் குழந்தைகளையோ அல்லது அவர்களின் வாழ்நாள் சேமிப்பையோ சார்ந்திருக்கிறார்கள். இரண்டிலும், ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவத் தேவைகளின் போது நமது சேமிப்பை பாதிக்காமல் பாதுகாக்கும். மேலும், கேஷ்லெஸ் காப்பீடு கையில் இருப்பதால், நம் பெற்றோர்களிடம் நாம் இல்லாதபோதும், சிரமமின்றி, எளிதாக மருத்துவ வசதியைப் பெற முடியும். 

  • சேமிப்பிற்கான நிதி சௌகரியம்: மருத்துவ பில்களை செலுத்துவது நிச்சயமாக ஒரு கடினமான வேலை மற்றும் சில திட்டமிடப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் சேமிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சுகாதார தேவைகள் நீங்கள் குறைவாக எதிர்பார்க்கும் போது வரும். அந்த சமயங்களில், உங்கள் திட்டமிடல்கள் மற்றும் சந்தோஷமான விஷயங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள் 

  • இன்னும் கொஞ்சம் வரிச் சேமிப்பு எப்போதும் வரவேற்கத்தக்கது: இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கு செலுத்தப்படும் பிரீமியமும் இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி வரி விலக்குக்கு உட்பட்டது. சுய, மனைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோருக்கு செலுத்தப்படும் பிரீமியமும் இதில் அடங்கும். எனவே, என்.ஆர்.ஐ-கள் பிரிவு 80டியின் கீழ் இந்திய வருமானத்தில் தள்ளுபடி கோரலாம். 

     

வரிச் சலுகைகள் பற்றி மேலும் அறிக: 

இந்தியாவில் பெற்றோர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்

வயது எல்லை

பாலிசியில் வயது வரம்பை சரிபார்க்கவும். இது மூத்த குடிமக்களுக்கான பாலிசி என்பதால் நுழைவு வயது பெரும்பாலும் 60 ஆண்டுகள் இருக்கும். பெரும்பாலான காப்பீட்டாளர்கள் 80 வயது வரை கவரேஜை வழங்கினாலும், சிலர் 65 வயது வரை மட்டுமே கவர் செய்கிறார்கள். அவற்றில் சில உறுதியான வாழ்நாள் புதுப்பித்தலையும் வழங்குகின்றன.

காப்பீட்டு தொகை

உங்கள் பெற்றோரின் தேவைகளை உணர்ந்து, அதற்கேற்ப உங்கள் ஹெல்த் பாலிசியில் நீங்கள் எடுக்க விரும்பும் காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யுங்கள்.

சேர்த்தல் மற்றும் விலக்குகள்

மிக முக்கியமான புள்ளி. பாலிசியில் கவனமாக உள்ளடக்கப்பட்ட சேர்த்தல் மற்றும் விலக்குகளைச் சரிபார்க்கவும். இது ஒரு கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசியாக இருந்தால், பாதுகாக்கப்பட்ட தீவிர நோய்களின் பட்டியலைச் சரிபார்க்கவும், ஆயுஷ், கோவிட் கவர், டே கேர் நடைமுறைகள், வீட்டு சிகிச்சை போன்ற பிற கவர்களைப் பார்க்கவும்.

கேஷ்லெஸ் சிகிச்சை

உங்கள் பாலிசியின் நெட்வொர்க் ஹாஸ்பிடல் கவரேஜை சரிபார்க்கவும், இதனால் தேவைப்படும் போது மற்றும் நீங்கள் நாட்டில் இல்லாத பட்சத்தில், பெற்றோர்கள் எந்த பணமும் தேவையில்லாமல் சுகாதார வசதிகளை எளிதாக அணுக முடியும்.

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலம்

பெரும்பாலான பாலிசிகள் 24 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரை இருக்கும் முன்பே இருக்கும் நோய்க்கான காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளன. இந்த காத்திருப்பு காலம் முடிந்த பின்னரே, ஏற்கனவே உள்ள நோய்க்கு நீங்கள் உரிமை கோர முடியும். எனவே, குறைந்தபட்ச காத்திருப்பு காலத்துடன் வரும் பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும்.

தடையற்ற மற்றும் விரைவான கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறை

தடையற்ற மற்றும் விரைவான செட்டில்மெண்ட் செயல்முறை, இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அருகில் இல்லாத போது அங்கும் இங்கும் வேலைக்கு ஓட வேண்டியதில்லை

டிஜிட் மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ் செய்வதில் என்ன பயன்?

எளிய ஆன்லைன் செயல்முறைகள்- ஹெல்த் இன்சூரன்ஸ்க் பாலிசியை வாங்குவது முதல் கிளைம் செய்வது வரை காகித ஆவனங்களில்லாமல், எளிதான, விரைவான மற்றும் தொந்தரவு இல்லாத செயல்முறை! கிளைம்களுக்கு கூட அசல் பிரதிகள் தேவை இல்லை!

வயது அடிப்படையிலான அல்லது ஸோன் அடிப்படையிலான கோ-பேமெண்ட் செலுத்துதல் இல்லை- எங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வயது அடிப்படையிலான அல்லது ஸோன் அடிப்படையிலான கோ-பேமெண்ட் செலுத்துதலுடன் வருகிறது. இதன் பொருள், ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம்களின் போது, உங்கள் பாக்கெட்டில் இருந்து நீங்கள் எதையும் செலுத்த வேண்டியதில்லை.

அறை வாடகைக் கட்டுப்பாடு இல்லை- ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் எங்களிடம் அறை வாடகைக் கட்டுப்பாடுகள் இல்லை. நீங்கள் விரும்பும் எந்த மருத்துவமனை அறையையும் தேர்வு செய்யவும்.

எஸ்.ஐ வாலட் நன்மை - பாலிசி காலத்தில் உங்கள் இன்சூரன்ஸ் தொகையை நீங்கள் காலி செய்தால், நாங்கள் அதை உங்களுக்காக நிரப்புகிறோம்.

எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுங்கள்- கேஷ்லெஸ் சிகிச்சைக்காக இந்தியாவில் உள்ள 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் இருந்து தேர்வு செய்யவும் அல்லது திருப்பிச் செலுத்துவதைத் தேர்வு செய்யவும்.

நல்வாழ்வு நன்மைகள் - சிறந்த மதிப்பிடப்பட்ட உடல்நலம் மற்றும் நல்வாழ்வு கூட்டாளர்களுடன் இணைந்து டிஜிட் செயலியில் பிரத்யேக நல்வாழ்வு நன்மைகளைப் பெறுங்கள்.

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸின் முக்கிய பலன்கள்

கோ-பேமெண்ட் இல்லை
அறை வாடகை வரம்பு இல்லை
கேஷ்லெஸ் மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் 10500+ நெட்வொர்க் மருத்துவமனைகள்
உள்ளமைக்கப்பட்ட பர்சனல் ஆக்சிடன்ட் கவர் உள்ளது
நல்வாழ்வு பலன்கள் 10+ நல்வாழ்வு பார்ட்னர்களிடமிருந்து கிடைக்கும்
நகர அடிப்படையிலான தள்ளுபடி 10% வரை தள்ளுபடி
உலகளாவிய கவரேஜ் உள்ளது*
குட் ஹெல்த் தள்ளுபடி 5% வரை தள்ளுபடி
கன்ஸ்யூமபில் கவர் ஆட்-ஆனாகக் கிடைக்கிறது

*உலகளாவிய ட்ரீட்மெண்ட் திட்டத்தில் மட்டுமே கிடைக்கும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

என்.ஆர்.ஐ-கள் (NRI) இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க முடியுமா?

ஆம், என்.ஆர்.ஐ-கள் கண்டிப்பாக இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸை வாங்க முடியும். இதில் அவர்களின் மனைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோர்கள் உள்ளனர்.

ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

ஆம். ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்குக் கவர் செய்கின்றன. இருப்பினும், சமீபத்தில், ஒரு சில இன்சூரன்ஸ் வழங்குநர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து மற்ற நாடுகளிலும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்டத் தொடங்கியுள்ளனர்.

என்.ஆர்.ஐ-கள் (NRI) ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் வரி விலக்கு கோர முடியுமா?

ஆம், இந்தியாவில் எந்தவொரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் செலுத்தப்படும் பிரீமியமானது பிரிவு 80Dயின் கீழ் வருகிறது மேலும் அவர்களின் இந்திய வருமானத்தில் வரி விலக்கு பெறலாம். 

உங்கள் பெற்றோருக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது பற்றி மேலும் படிக்கவும்.