ஏந்திகள்வழி பரவும் நோய்கள் ஆகிய இரண்டிற்கும் இன்சூர் செய்வது ஏன் அவசியமாக கருதப்படுகிறது ?
கோவிட்-19 என்று வரும்போது மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்றும் இருக்கிறது. (1)
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஏற்படும் அனைத்து விதமான தொற்று நோய்களிலும், ஏந்திகள்வழி பரவும் நோய்கள் மட்டுமே 17% ஆக உள்ளது. அது மட்டுமின்றி, அந்நோய்கள் 700,000 இறப்புகளுக்கு வழிவகுக்கிறது! (2)
இந்தியாவிலிருக்கும் ஏராளாமான மக்கள் தொகையினாலும், தட்பவெப்ப நிலையின் காரணமாகவும் மலேரியா நீண்ட காலமாக இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. 2018இல் மட்டும் 429,928 பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி 96 பேர் மலேரியாவினால் உயிரிழந்துள்ளனர்! (3)
கோவிட்-19 மற்றும் ஏந்திகள்வழி பரவும் நோய்களுக்காக டிஜிட் வழங்கும் ஹெல்த் இன்சூரன் ஏன் சிறந்தது?
ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இன்டிவிஜுவல் கவர்/தனிப்பட்ட காப்பீடு:அனைவருக்குமே போதுமான பாதுகாப்பு தேவை, அதனால்தான் உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் இந்த பாலிசியை உங்களால் வாங்க முடியும்
அறை வாடகைக்கு ஆகும் செலவுக்கு வரம்பு இல்லை: அனைவருக்கும் வெவ்வேறு விதமான விருப்பங்கள் உள்ளன, எங்களால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான், அறை வாடகை (ரூம் ரென்ட்) அல்லது ஐசியு அறை வாடகைக்கு ஆகும் செலவிற்கு வரம்பு இல்லை. நீங்கள் விரும்பும் எந்த அறையை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.
உங்கள் இன்சூரன்ஸ் தொகையை தனிப்பயனாக்கவும்: ஒவ்வொருவரின் தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதனால்தான், நாங்கள் உங்களின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில், நீங்கள் உங்கள் இன்சூரன்ஸ் தொகையை சுயமாகத் தேர்வு செய்வதற்கான விருப்பத்தையும் உங்களுக்கு வழங்குகிறோம்!
குறைந்தபட்ச காத்திருப்பு காலம்: பாலிசி தொடங்கிய தேதியிலிருந்து, இந்த பாலிசிக்கு காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) குறைந்தபட்சமாக 15 நாட்கள் மட்டுமே.
எளிமையானது, மற்றும் டிஜிட்டல் ஃபிரண்ட்லி: இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது முதல் அதற்கான கிளைம்-ஐ கோருவது வரையிலான அனைத்து செயல்முறைகளும் எளிதானது. மேலும், அவற்றை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் செய்யலாம்.
இந்த பாலிசியின் கீழ் உள்ளடங்கியுள்ளவை யாவை?
ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ(IRDAI)யிடம், அவர்களது சாண்ட்பாக்ஸ் விதிமுறைகளின் கீழ் இந்த கவர் தாக்கல் செய்யப்படுகிறது. அவர்களின் குரூப் இன்சூரன்ஸ் நோக்கத்திற்காக குழு அமைக்கப்படுகிறது; 442/IRDAI/HLT/GEN/GOD-SB/2019-20.
- கோவிட்-19, டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய் (வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே செலுத்தக்கூடியது), கலா அசார், சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் ஜிக்கா வைரஸ் போன்ற தொற்று நோய்களுக்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கானக் காப்பீடு.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்டுள்ள செலவுகளுக்கு காப்பீடு, 30 நாட்கள் வரை.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஏற்படும் செலவுகளுக்கு காப்பீடு, 60 நாட்கள் வரை.
- சாலை வழி ஆம்புலன்ஸ் கட்டணங்கள் (நீங்கள் தேர்ந்தெடுத்த எஸ்ஐ-யில்(SI) 1%, ரூ.5,000 வரை) அளிக்கப்படுகிறது.
- இரண்டாம் முறையாக பெறும் மருத்துவ ஆலோசனைக்கான செலவிற்கும் காப்பீடு வழங்கப்படுகிறது.
இதில் உள்ளடங்காதவை யாவை?
நாங்கள் வெளிப்படைத்தன்மையை நம்புவதுடன், உங்களுக்கு எந்த வித இறுதி நேர ஆச்சரியங்களையும் கொடுக்க விரும்பவில்லை- எனவே இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்.-இந்த பாலிசியில் கீழ் உள்ளடங்காதவை யாவை என்பதே.
- கோவிட்-19 அல்லது மற்ற 7 ஏந்திகள்வழி பரவும் நோய்களில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, மருத்துவமனையில் தங்கி எடுத்துக்கொள்ளும் மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- பாலிசி தொடங்கிய தேதியிலிருந்து, 15 நாட்களுக்கு ஆரம்ப காத்திருப்பு காலம் (இனிஷியல் வெயிட்டிங் பீரியட்) உள்ளது.
- பாதிக்கப்பட்டிருப்பதற்கான பாசிட்டிவ் பரிசோதனை அறிக்கை இல்லாமல் நோய் அறிகுறிகள் மட்டுமே வைத்து எடுத்துக்கொள்ளும் சிகிச்சைக்கு காப்பீடு வழங்கப்படாது.
- ஐசிஎம்ஆர்(ICMR), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, புனே அல்லது இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் தவிர, வேறு எந்த மையத்திலாவது கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டிருந்தால், அது இன்சூரன்ஸில் அடங்காது.
- இந்தியாவை தவிர வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றிருந்தால், அச்செலவுகள் இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.
- ஏற்கனவே உள்ள மருத்துவ நிலைகள் (அறிவிக்கப்பட்டிருந்தாலும் சரி அல்லது இல்லையென்றாலும் சரி) அது இன்சூரன்ஸில் கவர் செய்யப்படாது.
- இன்சூர் செய்யப்பட்ட உறுப்பினர்கள் கடந்த 2 வாரங்களில் கடுமையான இருமல், சுவாசப் பிரச்சினை, மூச்சுத்திணறல் போன்ற சுவாச தொடர்பான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது. அதுமட்டுமின்றி, இன்சூர் செய்யப்பட்ட உறுப்பினர்(கள்) நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதயம்/நுரையீரல்/கல்லீரல் தொடர்பான நோய்கள், புற்றுநோய், பக்கவாதம், அல்லது தொடர்ந்து மருந்து உட்கொள்ளல் தேவைப்படும் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது. அத்துடன், இன்சூர் செய்யப்பட்ட நபர்கள் எவ்வித மருத்துவ சிகிச்சைகளை விரைவில் எடுத்துக்கொள்ளப் போகிறவர்களாக இருக்கக்கூடாது.
- கோவிட்-19 மற்றும் 7 ஏந்திகள்வழி பரவும் நோய்களுக்காக மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைகளுக்கான செலவுகளைத் தவிர்த்து வேறு எந்த நோய்களுக்கும் ஆகும் செலவுகளை இந்த குறிப்பிட்ட பாலிசி உள்ளடக்காது.
- இன்சூர்டு உறுப்பினர்கள் ஏற்கனவே 7 ஏந்திகள்வழி பரவும் நோய்கள் அல்லது கோவிட்-19 நோயின் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது இந்த பாலிசியை வாங்கும் போது அந்நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுபவராகவோ இருந்தாலோ, அச்செலவுகள் இப்பாலிசியில் உள்ளடங்காது.
- கோவிட்-19 காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கோவிட்-19க்கு சிகிச்சையளிக்கப்பட்ட/பரிசோதிக்கப்பட்டு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட இன்சூர்டு உறுப்பினருக்குக் காப்பீடு வழங்கப்படாது.
- வீட்டிலேயே இருந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது இந்த பாலிசியில் காப்பீடு செய்யப்படாது.
இந்த பாலிசி எந்த ஏந்திகள்வழி பரவும் நோய்களுக்குக் காப்பீடு அளிக்கிறது?
மலேரியா காய்ச்சல் புரோட்டோசோவாவினால் ஏற்படுகிறது - இது பெண் அனோபிலிஸ் கொசுவின் பிளாஸ்மோடியம் மூலம் பரவுவதால், காய்ச்சல், பலவீனம், குளிர், தலைவலி, வாந்தி மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றை விளைவிக்கிறது.
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கடி மூலம் பரவும் வைரஸால் ஏற்படுகிறது, இதன் விளைவாக காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, தோல் தடிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான உள் இரத்தப்போக்கு போன்றவை ஏற்படுகிறது.
ஜிக்கா வைரஸ் கொசுக்கடி மூலம் ஏற்படும் வைரஸினால் ஏற்படுகிறது, இது காய்ச்சல், தோல் தடிப்பு, தசை வலி மற்றும் மூட்டு வலிக்கு வழிவகுக்கிறது. ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், வயிற்றில் உள்ள தங்கள் சிசுவிற்கு இவ்வைரஸை பரப்புகின்றனர். அதனால், சிசுவிற்கு மைக்ரோசெஃபாலி ஏற்பட வாய்ப்புள்ளது.
நிணநீர் மண்டலம் மைக்ரோ பைலேரியா ஒட்டுண்ணியால் முடக்கப்படும் போது யானைக்கால் நோய் ஏற்படுகிறது. இதனால், கைகால்களில் நிரந்தர உருமாற்றங்கள் ஏற்படும்.
லேயிஷ்மேனியா டோனோவானி என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் நாள்பட்ட மற்றும் அபாயகரமான நோய்த்தொற்றே கலா அசார் என்னும் கருப்பு காய்ச்சல் ஆகும். இந்நோயினால் உள்ளுறுப்புகள் அதாவது விஸ்செரா என்றழைக்கப்படும் உள் உறுப்புகள் (குறிப்பாக கல்லீரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகள்) பாதிப்படைகிறது.
சிக்குன்குனியா என்பது ஏடிஸ் கொசுக்கள் மூலம் வைரஸினால் ஏற்படும் நோய் ஆகும். இந்நோய், காய்ச்சல், பலவீனம் மற்றும் கடுமையான மூட்டு வலிகளுக்கு வழிவகுக்கிறது.
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்பது வைரஸ் காரணமாக ஏற்படுகின்ற மூளை அழற்சி ஆகும். இந்நோயினால் மு, காய்ச்சல், வாந்தி, வலிப்பு மற்றும் மரணம் போன்றவை ஏற்படுகிறது.
இந்த பாலிசியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
இது போன்ற பயங்கரமான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை கண்டறிவது பெருந்துயரத்தை ஏற்படுத்துவதாகும். டிஜிட் இதைப் புரிந்துகொண்டு, 8 நோய்களில் (கோவிட்-19 உட்பட) ஏதேனும் நோயினால், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உங்களுக்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்வதற்கான வசதியை உங்களுக்கு வழங்குகிறது.
ஏந்திகள்வழி பரவும் நோய்கள் தொடர்பான கிளைம்கள் பற்றி
- கோவிட்-19, டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய் (வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காப்பீட்டுச் செலவு வழங்கப்படும்),கலா அசார், சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் ஜிக்கா வைரஸ் போன்ற நோய்களால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதினால் உங்களுக்கு ஏற்படும் செலவுகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும்.
கோவிட்-19க்கான கிளைம்கள் பற்றி
- நீங்கள் பாலிசி காலத்தின் போது, கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டிருந்து, அந்நோயிற்கு மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அரசு, இராணுவம் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஆகும் செலவுகளுக்கு இந்த பாலிசியில் காப்பீடு அளிக்கப்படும்.
- இப்பாலிசியின் படி, கோவிட்-19-ற்காக இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்வது ஏற்க்கப்படும். இருப்பினும், இன்சூர் செய்யப்பட்டவர் இந்தியாவில் உள்ள ஐசிஎம்ஆர்(ICMR) அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் இருந்து நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியான பின்னரே கிளைம்கள் கோர அனுமதிக்கப்படும்.
ஏந்திகள்வழி பரவும் நோய்கள் மற்றும் கோவிட்க்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஏந்திகள்வழி பரவும் நோய்கள் என்றால் என்ன?
உலக சுகாதார மையம் (WHO) விளக்கத்தின் படி, ஏந்திகள்வழி பரவும் நோய்கள் என்பது ஒட்டுண்ணிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களினால் ஏந்திகள்வழி மூலம் பரவும் மனித நோய்கள் ஆகும். இந்த நோய்களைப் பற்றி நீங்கள் எங்கள் ஏந்திகள்வழியால் பரவும் நோய்கள் சுகாதார வழிகாட்டியில் மேலும் படிக்கலாம்.
இந்தியாவில் மிக அதிகமாக ஏற்படும் ஏந்திகள்வழி பரவும் நோய்கள் எவை?
இந்தியாவில், டெங்கு, மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் ஜிக்கா வைரஸ் ஆகியவை கொசுக்களால் பரவும் பொதுவான நோய்களாகும்.(மூலம்)
இந்தியாவில் ஏந்திகள்வழி பரவும் நோய்களை குணப்படுத்துவதற்கான செலவு எவ்வளவு?
ஒவ்வொரு நோயும் வெவ்வேறு தீவிரத்தை உடையது மற்றும் அவற்றின் சிகிச்சை செலவுகளும் வேறுபடும் - அதற்கு ஆகும் மருத்துவ செலவு, நீங்கள் வாழும் இடம் மற்றும் நோயின் தீவிரம் ஆகியவற்றை பொறுத்தது. இருப்பினும், செலவுகள் பற்றி ஒரு யோசனையைப் பெற, டெங்கு நோயை உதாரணமாக எடுத்துக்கொள்வோம் - பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வழங்கிய தரவுகளின்படி, டெங்குவிற்கான சிகிச்சை செலவு ரூ.25,000 முதல் ரூ.70,000 வரை இருக்கலாம்!
கோவிட்-19 மற்றும் என் முழு குடும்பத்திற்கும் ஏந்திகள்வழி பரவும் நோய்களுக்கான இந்த பாலிசியை நான் பெற முடியுமா?
இந்த பாலிசியின் படி, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான இன்சூரன்ஸ் பிளான்கள் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், ஒரு ஃபேமிலி ப்ளோட்டர் பிளானை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இதில் இல்லை.
கோவிட்-19 மற்றும் ஏந்திகள்வழி பரவும் நோய்களை உள்ளடக்கிய ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குவதன் நன்மைகள் என்ன?
அத்தகைய பாலிசியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, நீங்கள் நிதி பற்றிய எவ்வித கவலையும் இன்றி, தரமான ஹெல்த்கேர் மற்றும் சிகிச்சையைப் பெறலாம் என்பதே!