ஹெல்த் இன்சூரன்ஸை ஆன்லைனில் வாங்கவும்

டிஜிட் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு மாறுங்கள்

அரசு ஊழியர்களுக்கான பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸ்

இந்திய அரசு ஊழியர்களுக்கு பணிபுரியும் போதும் ஓய்வு பெற்ற பின்னரும் கூட அரசாங்கத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறும் உரிமை உண்டு. உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசின் ஹெல்த் ஸ்கீமில் (சி.ஜி.எச்.எஸ்) ஹெல்த்கேர் பெனிஃபிட்களைப் பெறும் உரிமை உண்டு.

இருப்பினும், இந்தத் திட்டங்களை மட்டுமே நம்பியிருப்பதில் சில வரம்புகள் மற்றும் சவால்கள் உள்ளன. எனவே, அரசாங்கத் திட்டத்திலிருந்து இந்த பேசிக் கவரேஜைப் பெறுவதுடன், ஒரு துணை ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குதலும் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் அடிஷனல் பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்க வேண்டியதற்கான 6 காரணங்கள்

அரசு ஊழியர்கள் தங்கள் தற்போதைய கவரேஜுடன் பர்சனல் ஹெல்த் இன்சூரன்ஸைச் சேர்க்க வேண்டிய சில அவசியமான காரணங்கள் இதோ.

1. குறைந்த நெட்வொர்க் மருத்துவமனைகள் கிடைக்கும் தன்மை

அரசாங்க ஊழியர்களின் முதன்மை கவலைகளில் ஒன்று, அரசாங்கத்தின் இன்சூரன்ஸ் ஸ்கீம்களின் கீழ் நெட்வொர்க் மருத்துவமனைகள் குறைவாக கிடைப்பதும் அடங்கும்.

பெரும்பாலான நேரங்களில், அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் மாற்றலாகி வேலை பார்க்கும் சூழ்நிலையிலேயே இருப்பார்கள், ஒரு சில சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு வெளிநாடுகளில் கூட போஸ்டிங் கிடைக்கிறது. இருப்பினும், அரசு ஹெல்த் ஸ்கீம்களின் நெட்வொர்க் மருத்துவமனைகள் எல்லா இடத்திலும் இருக்காது.

குறைவாகக் கிடைக்கும் தன்மை பிரச்சனை ஏற்படுத்துவதாக இருக்கலாம், மேலும் ஊழியர்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து நியாயமான தூரத்திற்குள் தரமான ஹெல்த்கேர் சேவைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம்.

2. பெற்றோருக்கான அடிஷனல் கவர்

பல அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் கவரேஜ் பெற விரும்புகிறார்கள். இருப்பினும், தற்போதுள்ள அரசாங்க இன்சூரன்ஸ் ஸ்கீம்கள் பெரும்பாலும் பெற்றோருக்குக் குறைவான கவரேஜையே வழங்குகின்றன, இதனால் மருத்துவ அவசரநிலைகள் ஏற்பட்டால் ஊழியர்கள் நிதி ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். தனியார் ஹெல்த் இன்சூரன்ஸை வாங்குதல் என்பது அரசாங்க ஊழியர்கள் தங்கள் பெற்றோரின் ஹெல்த்கேர் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பாக அடிஷனல் கவரைப் பெற அனுமதிக்கிறது.

3. கிரிட்டிக்கல் இல்னஸ்களுக்கான பிரத்யேகமான சிகிச்சை

சில கிரிட்டிக்கல் இல்னஸ்களுக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது, இது எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் கிடைக்காமல் போகலாம். பல நேரங்களில், இதுபோன்ற கிரிட்டிக்கல் இல்னஸ்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் கூட சில குறிப்பிட்ட சிகிச்சை மையங்கள் உள்ளன.

அரசாங்க இன்சூரன்ஸ் கவரேஜில் உள்ள கட்டுப்பாடுகளுடன், அரசாங்க ஊழியர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுபோன்ற முக்கியமான சிகிச்சைகள் தேவையாக இருந்து நெட்வொர்க் வசதிகள் குறைவாக இருக்கும்போது அவர்கள் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

தனியார் ஹெல்த் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தனிநபர்கள் மருத்துவமனைகள் மற்றும் நிபுணர்களின் பெரிய நெட்வொர்க்கிற்கான அணுகலைப் பெறுகிறார்கள், கிரிட்டிக்கல் இல்னஸ்களுக்கான சிறந்த பராமரிப்பு அணுகலையும் அதிகரிக்கிறார்கள்.

4. எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்படும் அதிருப்தி

அரசாங்க இன்சூரன்ஸ் ஸ்கீம்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட மருத்துவமனைகளுடன் மட்டுமே டை-அப்களைக் கொண்டுள்ளன, இது ஊழியர்களுக்கான விருப்பத்தேர்வுகளைக் குறைக்கிறது. சில சந்தர்ப்பங்களில், இந்த எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகள் வழங்கும் சேவைகளின் தரம் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் போகலாம். தனியார் ஹெல்த் இன்சூரன்ஸில் முதலீடு செய்வதன் மூலம், தனிநபர்கள் தங்ககளுக்கு விருப்பமான மருத்துவமனைகள் மற்றும் இன்சூரன்ஸ் வழங்குநர்களைத் தேர்வு செய்து அதிக திருப்தி அடைவதுடன் மேம்பட்ட ஹெல்த்கேர் உதவிகளையும் பெற்று மகிழலாம்.

5. சிக்கலான செயல்முறைகள்

அரசாங்க இன்சூரன்ஸ் ஸ்கீம்கள் பெரும்பாலும் சிக்கலான நிர்வாக செயல்முறைகளைக் கொண்டிருப்பதால் எதிர்பார்ப்பதை விட தாமதங்களும் தடைகளும் ஏற்படலாம். தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் பொதுவாக நெறிப்படுத்தப்பட்ட, செயல்திறமிகுந்த கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறைகளை வழங்குகின்றன. பெரும்பாலான நேரங்களில், டிஜிட்டல் மூலமான தொந்தரவு இல்லாத செயல்முறைகள், மக்கள் மீதான சுமையைக் குறைக்கிறது. அத்துடன் இது அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்விலும் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

இப்போது சீனியர் சிட்டிஸன் வயதை எட்டிய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது மேலும் முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறைகளைக் கடந்து செல்வது என்பது அவர்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும்.

6. அவசரநிலைகளுக்கு அடிஷனல் கவர் கிடைக்கும் தன்மை

மருத்துவ அவசரநிலைகள் நிதி ரீதியாகப் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கலாம், குறிப்பாகத் தற்போதுள்ள அரசாங்க இன்சூரன்ஸ் கவரேஜ் எதிர்பார்ப்பதை விட போதுமானதாக இல்லாவிட்டால் அது மேலும் சிரமம். அடிஷனல் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸைப் பெறுவதன் மூலம், அரசு ஊழியர்கள் எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகளின் போது தங்கள் நிதி பாதுகாப்பை அதிகரிக்கலாம்.

தனது பாக்கெட்டிலிருக்கும் தொகையை விட அதிகமாகும் செலவுகள் சுமையாகாமல் இருக்க தனிநபர்கள் சிறந்த ஹெல்த்கேர் சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதுடன் இந்த அடிஷனல் கவர்கள் பாதுகாப்பு வலையையும் வழங்குகின்றன. மேலும், அவசரநிலைகள் உடனடியாக அல்லது குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில், அருகிலுள்ள பேனல் வசதி இல்லாத நிலையில், இந்த அடிஷனல் கவர் உங்களைக் காப்பாற்றும் சேவகனாகத் துணை நிற்கும்.

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பெனிஃபிட்களை அனுபவிக்கும் அதே வேளையில், அரசாங்க இன்சூரன்ஸ் திட்டங்களுக்குத் துணைபுரிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டவும் சரியான காரணங்கள் உள்ளன.

தனியார் ஹெல்த் இன்சூரன்ஸில் முதலீடு செய்வதன் மூலம், அரசு ஊழியர்கள் இதுவரை மேலே விவாதிக்கப்பட்ட வரம்புகளைச் சமாளிக்கலாம். அத்துடன் அவர்களின் ஹெல்த்கேர் விருப்பத்தேர்வுகள் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறலாம், இது அவர்கள் பணிபுரியும்போது மட்டுமல்லாமல், பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற பிறகு கூடுதல் மற்றும் தொந்தரவு இல்லாத கவனிப்பு தேவைப்படும் போது அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காம்ப்ரிஹென்சிவ் பாதுகாப்பு மற்றும் மன அமைதி கிடைப்பதையும் உறுதி செய்கிறது.

அரசு ஊழியர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அரசு ஊழியர்கள் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களின் கீழ் தங்கள் பாதுகாப்பைக் கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியுமா?

ஆம், தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் பெரும்பாலும் பல்வேறு கவரேஜ் விருப்பங்கள் மற்றும் கஸ்டமைசேஷன் அம்சங்களை வழங்குகின்றன. அரசு ஊழியர்கள் அவர்களது குறிப்பிட்ட ஹெல்த்கேர் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம், இதில் பல்வேறு நிலைகளுக்கான கவரேஜ், அடிஷனல் ரைடர்கள் மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற பெனிஃபிட்கள் ஆகியவையும் அடங்கும்.

அரசு ஊழியர்களுக்குத் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களுடன் தொடர்புடைய காத்திருப்பு காலங்கள் (வெயிட்டிங் பீரியட்) உள்ளதா?

தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களில் ஆரம்ப காத்திருப்பு காலம்(வெயிட்டிங் பீரியட்), ப்ரீ-எக்சிஸ்டிங் நோய் காத்திருப்பு காலம் போன்ற பல்வேறு வகையான காத்திருப்பு காலங்கள் உள்ளன. பல்வேறு கவரேஜ் அம்சங்களுடன் தொடர்புடைய காத்திருப்பு காலத்தைப் புரிந்துகொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக மதிப்பாய்வு செய்வதும் முக்கியம்.

தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்கள் பொதுவாக அரசாங்கத் ஸ்கீம்களின் கீழ் வராத ஆல்டர்னேட்டிவ் அல்லது காம்ப்ளிமெண்டரி சிகிச்சைகளைக் கவர் செய்கிறதா?

ஆயுர்வேதம், ஹோமியோபதி அல்லது இயற்கை மருத்துவம் போன்ற ஆல்டர்னேட்டிவ் அல்லது காம்ப்ளிமெண்டரி சிகிச்சைகளுக்கான கவரேஜ் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களிடையே வேறுபடலாம். மற்ற பிளான்கள் சேர்க்கவில்லை என்றாலும் சில பிளான்கள் இந்த சிகிச்சைகளுக்கான கவரேஜை அவற்றின் ஆரோக்கிய அல்லது காம்ப்ரிஹென்சிவ் ஹெல்த் பேக்கேஜ்களின் ஒரு பகுதியாக வழங்குகின்றன. அத்தகைய சிகிச்சைகளுக்கான பாதுகாப்பின் அளவைப் புரிந்துகொள்ள பாலிசி விவரங்களை மதிப்பாய்வு செய்வது நல்லது.

அரசு ஊழியர்கள் பல்வேறு தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களுடன் தற்போது அரசு வழங்கும் மருத்துவ ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை எப்படி ஒப்பிடலாம்?

அரசு ஊழியர்கள் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களை ஒப்பிடும்போது கவரேஜ் பெனிஃபிட்கள், மருத்துவமனைகளின் நெட்வொர்க், பிரீமியம் விலைகள், கிளைம் செட்டில்மெண்ட் ரெக்கார்டுகள், கஸ்டமர் மதிப்பாய்வுகள் மற்றும் இன்சூரன்ஸ் வழங்குநர்களின் நற்பெயர் போன்ற காரணிகளைக் கவனத்தில்கொள்ளவும். ஆன்லைன் ஒப்பீட்டு தளங்களைப் பயன்படுத்துவது அல்லது இன்சூரன்ஸ் ஆலோசகர்களின் உதவியை நாடுவது தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும்.