டிஜிட் இன்சூரன்ஸ் பண்ணுங்க

ஜனஸ்ரீ பீமா யோஜனா பற்றி அனைத்தும்

ஜனஸ்ரீ பீமா யோஜனா பிளான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான லைஃப் இன்சூரன்ஸ் பிளானாகும். இந்தக் கட்டுரையில் ஜனஸ்ரீ பீமா யோஜனா கவரேஜ் மற்றும் சிக்ஷா சயோக் யோஜனா மூலம் வழங்கப்படும் பல்வேறு சிறப்புச் சலுகைகளைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் பிளானைப் பயன்படுத்த நீங்கள் பரிசீலித்துக் கொண்டிருந்தால் அல்லது யாருக்காவது விவரங்களை வழங்க விரும்பினால், உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க இந்தக் கட்டுரை சரியான இடம்! முழு பிளானையும் விரிவாகவும் காம்ப்ரிஹென்சிவாகவும் விளக்கியிருக்கிறோம்.

ஜனஸ்ரீ பீமா யோஜனா என்றால் என்ன?

இந்திய அரசும் லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவும் இணைந்து 2000-வது ஆண்டில் ஜனஸ்ரீ பீமா யோஜனா பிளானைத் தொடங்கின. கிராமப்புற மக்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் லைஃப் இன்சூரன்ஸ் வழங்குவதற்காக இந்தத் பிளானை உருவாக்கினர். மிக முக்கியமாக, இந்தத் பிளான் வறுமைக் கோட்டிற்குக் கீழே அல்லது சற்று மேலே இருக்கும் நபர்களை இலக்காக கொண்டுள்ளது.

தற்போது, இந்தத் பிளான் நாற்பத்தைந்து வெவ்வேறு தொழில் குழுக்களை உள்ளடக்கியிருக்கிறது. இது இப்போது முன்னர் நடைமுறையில் இருந்த இரண்டு அமைப்புகளை உள்ளடக்கியது - அவை, சமூக பாதுகாப்பு குழு இன்சூரன்ஸ் பிளான் மற்றும் கிராமப்புற குழு லைஃப் இன்சூரன்ஸ் பிளான் ஆகும்.

ஜனஸ்ரீ பீமா யோஜனா என்றால் என்ன என்பது பற்றிய உங்கள் புரிதலை இது தெளிவுபடுத்தியதாக நம்புகிறோம்!

ஜனஸ்ரீ பீமா யோஜனாவின் அம்சங்கள் என்ன?

 இது எல்.ஐ.சி. (LIC) உடன் இணைந்து தொடங்கப்பட்ட அரசு இன்சூரன்ஸ் பிளானாகும்.

  • இந்தத் பிளான் வறுமைக் கோட்டிற்கு மேல் அல்லது அதற்குக் கீழே உள்ளவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • ஒரு நபருக்கு பிரீமியம் ரூ.200.
  • விண்ணப்பதாரர் அல்லது மாநில அரசு அல்லது நோடல் ஏஜென்சி பிரீமியத்தில் 50% செலுத்துகிறது.
  • மீதமுள்ள 50%-ஐ சமூகப் பாதுகாப்பு நிதியம் செலுத்துகிறது.
  • சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பஞ்சாயத்துகள் அல்லது பிற நிறுவன ஏஜென்சிகளை நோடல் ஏஜென்சிகளாகக் கருதலாம்.
  • ஜனஸ்ரீ பீமா யோஜனா பிளான் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு தனித்துவமான சேவையை வழங்குகிறது. இந்தத் பிளான் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு ஒரு வருடத்திற்கு ரூ.30,000 அளித்து உதவுகிறது.
  • ஜே.பி.ஒய் (JBY) பங்கேற்பாளர்களாக இருக்கும் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் வழங்குகிறது. 11 அல்லது 12 ஆம் வகுப்புப் படிப்பவர்கள் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் வரை உதவித் தொகையாக ரூ.600 ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பெறலாம்.

ஜனஸ்ரீ பீமா யோஜனாவின் நன்மைகள் என்னென்ன?

எந்தவொரு பிளானையும் தேர்வு செய்வதற்கு முன், பதிவுசெய்வதன் நன்மைகளை மக்கள் எப்போதும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஜனஸ்ரீ பீமா யோஜனாவின் சில நன்மைகள் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளன.

  • இயற்கை மரணம் என்றால் பயனாளி ரூ.30,000 பெறுவார்.
  • விபத்து காரணமாக மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால், வழங்கப்படும் இழப்பீடு ரூ.75,000.
  • விபத்து காரணமாக பகுதி ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.37,500.

ஜே.பி.ஒய் (JBY) அல்லது ஜனஸ்ரீ பீமா யோஜனா கவரேஜுக்குப் பதிவு செய்வதன் நன்மைகள் இவை.

ஜனஸ்ரீ பீமா யோஜனா வழங்கும் சில சிறப்புத் பிளான்கள் என்னென்ன?

ஜே.பி.ஒய் (JBY) பிளான், இன்சூரன்ஸ் தொகையைத் தவிர, சில சிறப்புச் சலுகைகளையும் வழங்குகிறது. அவை பின்வருமாறு:

மகளிர் எஸ்.எச்.ஜி (சுய உதவிக் குழுக்கள்) பற்றிய அடிப்படை விவரங்கள்

இத்பிளான் பெண்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இது அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறது. டெர்ம் இன்சூரன்ஸ் பிளானில் ரூ.30,000 கவரேஜ் கிடைக்கிறது. இத்தொகை ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது. பயனாளிகள் ரூ.200 ஆண்டு பிரீமியமாக செலுத்தினால் போதுமானது. பெண் உறுப்பினர் ரூ.100 செலுத்த வேண்டும். எல்.ஐ.சி (LIC) மீதமுள்ள ரூ.100-ஐ செலுத்தும்.

சயோக் யோஜனா பற்றிய அடிப்படை விவரங்கள்

இந்த பிளான் குறிப்பிட்ட குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். அவர்களின் பெற்றோர் ஜே.பி.ஒய் (JBY) உறுப்பினர்களாக இருக்க வேண்டும். உதவித் தொகையாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.600 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை ஒரு வீட்டிற்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஜனஸ்ரீ பீமா யோஜனாவில் உள்ள பல்வேறு குழுக்கள் என்னென்ன?

ஜே.பி.ஒய் (JBY) குழுவானது சுமார் நாற்பத்தைந்து வெவ்வேறு வகை தொழிலாளர்களை உள்ளடக்கியது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் 45 வகைகளின் பட்டியல்:

  • அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள்
  • பீடி தொழிலாளி
  • விவசாயிகள்
  • செங்கல் சூளை தொழிலாளர்கள்
  • தோட்டத் தொழிலாளர்கள்
  • மீனவர்கள்
  • காகிதப் பொருட்கள் உற்பத்தியாளர்
  • விசைத்தறி தொழிலாளர்கள்
  • சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகள்
  • தச்சர்கள்
  • எஸ்.இ.டபிள்யூ.ஏ (SEWA) உடன் இணைக்கப்பட்ட அப்பளத் தொழிலாளர்கள்
  • மண் பொம்மை உற்பத்தியாளர்கள்
  • இளநீர் வியாபாரிகள்
  • அச்சகத் தொழிலாளர்கள்
  • கிராமப்புற ஏழைகள்
  • நகர்ப்புற ஏழைகளுக்கான பிளான்
  • ரப்பர் மற்றும் நிலக்கரி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
  • மெழுகுவர்த்தி போன்ற இரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்
  • முதன்மை பால் உற்பத்தியாளர்கள்
  • கட்டுமானத் தொழிலாளர்கள்
  • பட்டாசுத் தொழிலாளர்கள்
  • தூய்மைப் பணியாளர்கள்
  • செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
  • உப்பு உற்பத்தி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்
  • வெல்லம்/சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்
  • ரிக்ஷா இழுப்பவர்கள்/ஆட்டோ ஓட்டுனர்கள்
  • கைத்தறி நெசவாளர்கள்
  • மலைவாழ் பெண்கள்
  • கைத்தறி மற்றும் காதி நெசவாளர்கள்
  • கள் இறக்குபவர்கள்
  • ஜவுளி
  • வெற்றிலை சேகரிப்பாளர்கள்
  • வன ஊழியர்கள்
  • கைவினைக் கலைஞர்கள்
  • சுமை தூக்குபவர்கள்
  • பட்டுப்பூச்சி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்
  • ஆடு வளர்ப்பவர்கள்
  • போக்குவரத்து ஓட்டுநர் சங்க உறுப்பினர்கள்
  • பாதுகாவலர்கள்
  • தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
  • துணி தைக்கும் பெண்கள்
  • தோல் பதனிடும் தொழிலாளர்கள்
  • போக்குவரத்து தூய்மைப் பணியாளர்கள்
  • உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
  • எஸ்.எச்.ஜி (SHG) உடன் தொடர்புடைய பெண்கள்

ஜனஸ்ரீ பீமா யோஜனாவுக்கான தகுதிகள் என்னென்ன?

ஜே.பி.ஒய் (JBY) தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு.

  • தனிநபரின் வயது 18 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • ஒரு நபர் வறுமைக் கோட்டிற்கு கீழே அல்லது சற்று மேலே இருக்க வேண்டும்.
  • உறுப்பினர் அளவு குறைந்தபட்சம் 25 ஆக இருக்க வேண்டும்.
  • எந்தவொரு நோடல் ஏஜென்சி அல்லது தொழிற்கல்வி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

ஜனஸ்ரீ பீமா யோஜனாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஜனஸ்ரீ பீமா யோஜனா ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிட இந்த லிங்கைப் பயன்படுத்தலாம் - https://www.pdffiller.com/29825639-fillable-janshri-bima-yojanamp-form. மேலும், ஒரு நபர் நோடல் ஏஜென்சி அல்லது அவர் அங்கம் வகிக்கும் சுயஉதவி குழு மூலம் விண்ணப்பிக்கலாம். மற்றொரு வழியும் இருக்கிறது. எந்த எல்.ஐ.சி (LIC) அலுவலகம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 

ஜனஸ்ரீ பீமா யோஜனா, பொருளாதாரத்தில் பின்தங்கிய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு இன்சூரன்ஸ் பாலிசிகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்பிளான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் பயனளிக்கிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜனஸ்ரீ பீமா யோஜனா ஒரு லைஃப் இன்சூரன்ஸ் பிளானா?

அதுமட்டுமில்லை, விபத்து காரணமாக நிரந்தர அல்லது பகுதி ஊனம் ஏற்பட்டாலும் நிதி உதவியை வழங்குகிறது. எனவே, இந்தத் பிளான் ஒரு தனிநபரின் மரணத்தை மட்டுமே காப்பதுடன் விபத்து சமயத்திலும் பாதுகாப்பை வழங்குகிறது.

ஜனஸ்ரீ பீமா யோஜனாவுக்கு ஜி.எஸ்.டி (GST)-இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?

ஆம், அதிகம் பேரின் பங்கெடுப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கம் இந்த பிளானிற்கு ஜி.எஸ்.டி (GST)-இல் இருந்து விலக்கு அளித்துள்ளது.

ஜனஸ்ரீ பீமா யோஜனாவின் கவரேஜ் காலம் என்ன?

ஜே.பி.ஒய் (JBY) திட்ட காலம் 1 வருடம்.